ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து

செவ்வாய், 30 ஜூன், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள அறிக்கை: 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூழ்ச்சிகளால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்களுக்கான ஒரு நல்லரசாக முன்னுதாரணம் மிக்க ஆட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடத்தி வருகிறார். அவரது வரலாற்று வெற்றிக்கும் சாதனைக்கும் எதிரிகளால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சவாலையும் எதிர்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக மாண்புமிகு முதல்வர் அவர்கள் களமிறங்கினார்.. அவரை மக்கள் மன்றத்தில் தேர்தலில் எதிர்கொள்ள திராணியற்ற எதிர்க்கட்சிகள் புறமுதுகிட்டு ஓடின. இன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன.. மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.. 

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றரை லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக அரசியல் வரலாறு இதுவரை காணாத வகையில் வெற்றி வாகை சூடியுள்ளார் மாண்புமிகு முதல்வர் அவர்கள். இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமது 'நன்றி' அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமே. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக மாண்புமிகு முதல்வர் அவர்களே மக்கள் பணியைத் தொடருவார்.. தமிழினமும் தமிழகமும் இழந்த வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கவும் வென்றெடுக்கவும் மக்களுக்கான நல்லாட்சிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் தொடர்ந்து தலைமை வகிப்பார் என்பதுதான் தமிழக மக்களின் பெருவிருப்பம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இத்தகைய சரித்திரம் பேசுகிற மகத்தான வெற்றியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த அத்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலின் தேர்தல் சரித்திரத்தில் மிகப் பெரும் சாதனை வெற்றியை பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்தலைவர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP