பெருமகனார் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வணக்கம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெருமகனார் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வணக்கம்!!
தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனாரின் அருந்தவப் புதல்வர் சிவந்தி ஆதித்தனாரின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் தமிழினம் அன்னாரது அரும்பணிகளை நன்றியோடு நினைவு கொள்கிறது.
கல்வி, ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, இலக்கியம், திரைப்பட என அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் பெருந்துணையாக இருந்தவர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஒலிம்பிக் அரங்கத்துக்கு சென்று சேர்த்து அங்கீகாரத்தை தமிழினத்துக்குப் பெற்றுக் கொடுத்த பெருமகனார்...
தந்தை அய்யா ஆதித்தனார் வழியில் இதழியில் துறையில் அடுத்த கட்ட பாய்ச்சலை தந்தி தொலைக்காட்சி வழியே நிகழ்த்திக் காட்டிய முன்னுதாரன பேராளர்...
நேர்மையுடனும் நெஞ்சுரத்துடன் கால்பதித்த அனைத்து துறைகளிலும் உயரிய எட்டத்தைத் தொட்டவர்.. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் வழியை அடியொற்றி ஈழத் தமிழர் உரிமைப் போராட்டங்களுக்கும் தமிழ்நாட்டு உரிமைப் போராட்டங்களுக்கும் உற்ற உறுதுணையாக இருந்தவர் சிவந்தி ஆதித்தனார்..
பெருமகனார் சிவந்தி ஆதித்தனாரின் 2வது ஆண்டு நினைவேந்தல் நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது செம்மாந்த வணக்கங்களை செலுத்துகிறது.
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP