பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனிடம் கோரிக்கை மனு

செவ்வாய், 24 ஜூன், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திங்கட்கிழமை (23.06.2014) அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் சத்யராஜ், ஜவகர், தாமோதரன், செந்தில், பிரதீப்குமார் உள்ளிட்டோர் அளித்த மனு விபரம்:


பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், முழுநேர பணி வழங்கவும், பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், தங்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP