தனித் தமிழீழம் அமைய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்

திங்கள், 23 ஏப்ரல், 2012

கிருஷ்ணகிரி:


தென்பெண்ணையாறு தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு தடுத்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.

கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அளித்த பேட்டி


தற்போது எடுக்கப்பட உள்ள சமூக, பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின் சாதிக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 



 எம்.பி.க்கள் குழு பயணத்தால் பலனில்லை:


          இலங்கைக்கு சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவால் பலன் ஏதும் இல்லை.எனவே, ஐ.நா. மேற்பார்வையோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து மக்கள் விரும்புகின்ற ஒரு சுதந்திர அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்தி தமிழ் ஈழம் அமைய, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.வேல்முருகன். பேட்டியின் போது, மாநில பொதுச்செயலர் வை.காவேரி, மாநிலத் தலைவர் தீரன், மாநில இணைப் பொதுச்செயலர் எஸ்.எஸ்.சண்முகம், மாநில அமைப்புச் செயலர் மே.ப.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP