தொழிலதிபர் அரவிந்த், ஐ.பி.எல்.20 கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

வியாழன், 12 மார்ச், 2015

சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தில் 12.03.2015 அன்று நடந்த இணைப்பு விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் முன்னிலையில் தொழிலதிபர் திரு.அரவிந்த் மற்றும் IPL T 20 கிரிக்கெட் வீரர் திரு.தலைவன் சற்குணம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.








காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

புதன், 11 மார்ச், 2015

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 11.3.2015 அன்றுனடைபெற்றது.

முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலர் வைகோ,  திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன் உட்பட காவிரி பாதுகாப்பு இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 





தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 14.03.2015 அன்று நடைபெற உள்ளது

செவ்வாய், 10 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 14.03.2015 அன்று காலை10.00 மணிக்கு கும்பகோணம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.   

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் 200 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

திங்கள், 9 மார்ச், 2015

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் 09.03.2015 இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். 
இடம் : சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகம் .



கடலூர் மாவட்டம் கொஞ்சிகுப்பம், சிறுதொண்டமாதேவி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து 150 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

ஞாயிறு, 8 மார்ச், 2015

கடலூர் மாவட்டம் கொஞ்சிகுப்பம், சிறுதொண்டமாதேவி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து 150 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் மிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். 















Pages (26)123456 Next

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP