தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

 
 
 
அகிலமே கொண்டாடும் ஆங்கில புத்தாண்டு எல்லோருக்கும் வளமான ஆண்டாக அமைய வேண்டும்  என்று வாழ்த்தி தனிமனித முன்னேற்றம் தான் நமது முன்னேற்றம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து ஈடுபாடு உடனும் கடினமாகவும் உழைக்க வேண்டும் அப்போது தான் நாம் நினைக்கின்ற லட்சியம் நிறைவேறும். தமிழர் நலம் உயர வளம் உயர தரணியிலே திக்கெட்டும் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணமெல்லாம்  ஈடேற சர்வதேச அரங்கினுள்ள தமிழர்களின் உரிமைக்குரல் ஒலித்திடவும் அதன் விளைவாய் தமிழர்களின் நிலை உயரவும், சிறக்கவும் உலக அமைதியின் மேன்மை நெறியில் அனைவரும் அன்பு நிறைந்து வாழவும், உரிமையும் மேம்பட பிறக்கட்டும் இனிய புத்தாண்டு என்று தொடர்ந்து எமது வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பத்திரிக்கையாளர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
நிறுவனத் தலைவர், 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

சனி, 28 டிசம்பர், 2013

இலங்கை சிறையில் உள்ள 210 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 03.01.2014 அன்று சென்னை சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 27.12.2013 (வெள்ளிக்கிழமை) அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முற்றுகையிடும் போராட்டம்:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் சென்ற 70 படகுகளையும் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. உண்ணாவிரதம், கடை அடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை தமிழக மீனவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கத்துறை அலுவலகத்தை 03.01.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி:


பா.ம.க. எங்களின் உழைப்பை உறிஞ்சி விட்டது. அதனால் தான் பா.ம.க.வில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ம.க. இல்லாத அணியில் இணைவோம்.திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற டாக்டர் ராமதாஸ் இப்போது அந்த கட்சிகளிடம் கூட்டணிக்காக காத்திருக்கிறார். டாக்டர் அன்புமணி ராமதாசை டெல்லிக்கு அனுப்பி தலைவர்களை சந்திக்க செய்கிறார்.

தமிழக பிரதமர்:

பிப்ரவரி 2–ந்தேதி சேலத்தில் எங்கள் கட்சியின் 3–வது ஆண்டு தொடக்க விழா நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். தமிழகத்தில் இருந்து யார் பிரதமராக வந்தாலும் எங்களுக்கு சந்தோஷம் தான். ஜெயலலிதா பிரதமராக வந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.
கொற்றவ மூர்த்தி:


முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட செயலாளரும், பா.ம.க.வின் மாநில கைவினைப் பொருள்கள் பிரிவு தலைவருமான திரு.கொற்றவ மூர்த்தி அவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்.

பேட்டியின்போது மாநில பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் காமராஜ், இணைப் பொது செயலாளர் போரூர் சண்முகம், தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவா, செந்தில்குமார், துணைப் பொது செயலாளர் ஜெயமோகன், வில்லிவாக்கம் தேவ்ராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர், வே.சாமிநாதன் சபரிஷ், மாநிஉள்பட பலர் கலந்து கொண்டனர்.



Read more...

திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 18 டிசம்பர், 2013

திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (17.12.2013) வெளியிட்ட அறிக்கை:


திருப்பதி அருகே செம்மரக் கடத்தலை தடுக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கடத்தல்காரர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானவர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர, அன்றைய தினம் திருப்பதி கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள், ரயில் நிலையத்தில் நின்றவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.

உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதில் ஆட்சேபனை கிடையாது. ஆனால் அப்பாவி தமிழர்களை சித்ரவதை செய்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Read more...

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் அவரகள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

திங்கள், 16 டிசம்பர், 2013

தமிழகத்தில் கால்நடைகளிடையே வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்  கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (14-12-2013) சனிக்கிழமையன்று மிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்தில்மிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் பேசியது:

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 20,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 10,000.00 ரூபாயும், கோமாரி நோய் தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 10,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 5,000.00 ரூபாயும் தமிழக அரசு வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தி.வேல்முருகன் தலைமையில் 14.12.2013 அன்று நடைபெறும் நடைபெறும்

செவ்வாய், 10 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை போரூர் கட்சி அலுவலகத்தில் 14.12.2013 அன்று சனிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். எதிர்வரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். 


Read more...

கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தி.வேல்முருகன் தலைமையில் 14.12.2013 அன்று ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளுக்குரிய  நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்கக்கோரியும், கிராமங்கள்தோறும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முன்னிலை:

திரு. வை.காவேரி, பொதுச்செயலாளர்,
திரு. மே.பா.காமராஜ், மாநில அமைப்பு செயலாளர்,
திரு. போரூர் சண்முகம், இணைப் பொதுச்செயலாளர்,
திரு. சத்திரியன் து.வேணுகோபால், துணைப் பொதுச்செயலாளர்,
திரு. சைதை.சிவராமன், மாநில தொழிற்சங்கத் தலைவர்

நாள்: 14.12.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி அளவில்
இடம்: வள்ளுவர்கோட்டம், சென்னை

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Read more...

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 3 டிசம்பர், 2013

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோமாரி நோயை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.   


Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP