பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்கும் "தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீட்டு விழா

செவ்வாய், 29 நவம்பர், 2011

பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்கும் "தந்தையும் தம்பியும் " - நூல் வெளியீட்டு விழா

Read more...

பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமை ஏற்கவேண்டும் - சீமான் ஆசை

வெள்ளி, 25 நவம்பர், 2011



Posted Image 


குமுதம் ரிப்போட்டர்  செய்தி
    நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமா
ன் குமுதம் ரிப்போட்டர் இதழுக்கு அளித்த பேட்டி
          ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்றோம். என்னைப் போல் அவருக்கும் தமிழின உணர்வு அதிகம்..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_35995119811.jpg

        பாட்டாளி மக்கள் கட்சியில் வேல்முருகன் துடிப்புமிக்க இளைஞராக வலம் வந்தார். இப்படிப்பட்ட நபரை வெளியுலகத்திற்குக் கொண்டு வர ஆசைப்பட்டேன். அதன் விளைவாகத்தான் நான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ திரைப்படத்தில் நடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு சம்மதித்து நடித்துக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை ராமதாஸ் பலர் முன்னிலையில் மிகக் கடுமையான சொற்களால் திட்டித் தீர்த்திருக்கிறார். இந்த விஷயம் எனக்கு இப்போதுதான் தெரியும். இதுவரையில் அவர் அந்தக் கசப்பான சம்பவத்தைச் சொன்னதே இல்லை. நான் வருத்தப்பட்டுவிடுவேனோ என்று நினைத்து என்னிடம் சொல்லாமல் இருந்தி ருக்கலாம்.

        
சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது வேல்முருகனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் கட்சியின் மீது உள்ள விசுவாசத்தால் அந்தக் கூட்டணியில் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் பா.ம.க.வை அ.தி.மு.க.வோடு இணைக்கும் முயற்சியும் எடுத்தோம். ஆனால் பலனில்லை. அப்போது நான் அ.தி.மு.க.விற்கு. ஆதரவாக வாக்கு சேகரித்தேன். அவர் எதிரணியில் இருந்ததால் அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்க முடியாத சங்கடம் ஏற்பட்டது. இந்நிலையில், என்னிடம் ‘இந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பமில்லை’ என்று வேதனையோடு கூறினார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி ‘நீங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும்’ என்று கூறினேன். அவர் தோற்றுப்போய் விட்டார்.

       வேல்முருகனை பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பா.ம.க.விற்குதான் இழப்பே தவிர வேல்முருகனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாம.க. ஒரு நல்ல தளபதியை இழந்துள்ளது. அவருக்கு ஆறுதல் கூறச் சென்றபோது என்னிடம் மிகவும் வருத்தப்பட்டார். நான் ‘நாம் தமிழர்’ கட்சியைத் தொடங்கியபோது எனக்கு எந்த அரசியல் அனுபவமும் இல்லாததால் கொளத்தூர் மணியை தலைமை தாங்குமாறு அவரை அழைத்தேன். அவர் மறுத்துவிடவே, நல்ல அரசியல் அனுபவம் கொண்ட வேல்முருகனை தலைமை தாங்குமாறு அழைத்தேன். அப்போது அவர் மறுத்துவிட்டார். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன்.


       உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள ‘நாம் தமிழர்’ கட்சிக்கு வேல்முருகன் போன்றவர்கள் வந்தால் இன்னும் வலிமை பெறும். தற்போது அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவரால் முடிவெடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். அவரின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று முடித்தார் சீமான்.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் புதியக் கட்சி: பஞ்சமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 22 நவம்பர், 2011

கடலூர்:

             பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ.  வேல்முருகனின் ஆதரவாளர்கள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கடலூர் கிழக்கு மாவட்ட இளம்புயல் எழுச்சிப் பாசறை என்ற அமைப்பு இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

           பா.ம.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். பாசறை நிர்வாகிகள் திருமால்வளவன், ஆனந்த், அருள்பாபு, பிரவின்குமார், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், அமராவதி, கடலூர்  நகராட்சி உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட வேல்முருகன் ஆதரவாளர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராமங்கள் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வேல்முருகன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாசறையை பலப்படுத்தவும், நிர்வாகிகளை நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் புதியக் கட்சி: முன்னாள் எம்.பி. இளங்கோவன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்:

          முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஆதரவாளர்கள் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  

         மறுமலர்ச்சி சீனுவாசன் வரவேற்றார். சிதம்பரம் நகராட்சி மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராயநல்லூர் உ.கண்ணன், எஸ்.கே.ராஜேந்திரன், மு.முடிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், பாமகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தி.திருமாவளவன், பாலகுருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வீரசோழகன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் சேரலாதன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் த.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மு.ஆளவந்தார். புவனகிரி காசிநாதன், திருமுட்டம் சீனுவாசன், இளைஞரணி கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், மாணவர் சங்கம் ரவி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

            மேலும், ஒன்றியச் செயலாளர்கள் ஆ.தமிழரசன் (திருமுட்டம்), ரவிச்சந்திரன் (புவனகிரி), சரவணன் (பரங்கிப்பேட்டை), சி.கோபு (பரங்கிப்பேட்டை), கு.பா.சங்கர் (காட்டுமன்னார்கோயில்), பாலமுருகன் (விருத்தாசலம்), கேபிள் சீனுவாசன் (திருமுட்டம்) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.  பண்ருட்டி வேல்முருகன் எடுக்கும் முடிவினை ஆதரித்து, அவரது பின்னால் எழுச்சியுடன் திரளாக நின்று பணியாற்றுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Read more...

Former Panruti MLA T. Velmurugan to launch new party in ‘Thai’

வியாழன், 17 நவம்பர், 2011

 http://www.thehindu.com/multimedia/dynamic/00839/17VBG_VELMURUGAN_839030f.jpg
 Expelled PMK Joint general secretary T.Velmurugan addressing his supporters at a meeting held at Town hall in cuddalore. 

       Ruling out any rapproachment with the PMK leadership, former MLA T. Velmurugan, who was expelled from the party, on Thursday, announced his decision to launch a new political outfit, possibly in the Tamil month of Thai.

         “I am in touch with my supporters and well wishers and we are discussing the name for the party and a flag besides the motto of the party. I hope we will in a position to launch the party in Thai,” he told the reporters here. Asked whether he would consider the option of going back to the PMK if former minister Anbumani Ramadoss convinced the party leadership about taking him back, Mr Velmurugan said “now it is impossible for me to work with the PMK.”

         “Mr Anbumani Ramadoss wanted me to remain patient after I was shown the doors. Many days passed and he could not do anything. Moreover, he remained a mute spectator and never intervened in my support when Dr Ramadoss and others humiliated me in the high level political committee,” he explained. Mr Velmurugan reiterated that ninety per cent of the party workers and leaders had expressed solidarity with him while the PMK, had been reduced to a private sector company, represented by a few leaders, mostly those who were averse to the idea of taking him back to the party.
      He also said he had adequate resources and capacity to run a political party since in the past he had successfully organised public meetings and mobilised funds for election campaigns through his contacts. “It was I who spent the money for the PMK candidate in Puducherry Lok Sabha polls. I was in charge of Pennagaram Assembly by elections and I am capable of running a party with the support of people cutting across caste lines,” he stressed. When reminded that in the past many PMK leaders such as Dheeran, Dalit Ezhilmalai, P.T. Elangovan and P.T. Arulmozhi, who were expelled from the party failed to make any impact, Mr. Velmurugan said that was why he was not in a hurry to launch a party. “I want to make proper arrangements before plunging into action. Wait and see,” he said. Mr Velmurugan said he was not ready to criticise any political party like PMK founder Ramadoss, who he said was known for blindly opposing parties such as the Congress and the BJP after being in their company in the Centre.

Read more...

தமிழர் திருநாளில் மக்களின் ஆதரவோடு தனிக் கட்சித் தொடக்கம் : பண்ருட்டி.தி.வேல்முருகன் பேட்டி

சென்னை:

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/pmk/velmurugam-ex-mla.jpg
 
முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் சென்னையில் அளித்த பேட்டி :

           பா.ம.க.வின் அடிப்படை பொறுப்பில் இருந்து என்னை நீக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. என்னை நீக்கியதற்கான காரணத்தை இதுவரை டாக்டர் ராமதாஸ் கூறவில்லை. கட்சி கூட்டத்தில் நான் பேசும்போது, சிலர் என்னை எதிர்த்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ்-அன்புமணி தட்டிக் கேட்கவில்லை. பா.ம.க. தொடங்கப்பட்ட போது வகுத்த கொள்கைகளை கடை பிடிக்கவில்லை. அந்த குறிக்கோள்களை சுட்டிக் காட்டி வலியுறுத்தும் போது என்னை எதிரியாக நினைத்து வெளியேற்றுகிறார்கள்.

           என் உயிர்மூச்சு இருக்கும் வரை நான் மீண்டும் பா.ம.க.விற்கு செல்ல மாட்டேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை மாதம் பிறந்தவுடன் கட்சி பெயரை அறிவிப்பேன். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து என்னிடம் தொடர்பில் உள்ளவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பேன். பா.ம.க. வில் உள்ள 80 சதவீத தொண்டர்கள்  எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ம.க. தொண்டர்கள் இணைய தளம் மூலம் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைப்படி கட்சியை தொடங்குவேன். எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டேன். அதற்காக எந்த கட்சியையும் நான் எதிர்க்க தயாராக இல்லை.

            தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பல கட்சிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். இதனால் எந்த கட்சியையும் எதிர்ப்பது எனது நோக்கம் அல்ல. பா.ம.க.வில் நான் இருந்த போது பல மாநாடுகளை நடத்தி இருக்கிறேன். பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். அதே போல் இந்த கட்சியையும் சிறப்பான முறையில் நடத்துவேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

உரிமை பிரச்சனை : கடலூரில் மாவட்ட பா.ம.க.அலுவலகத்துக்கு சீல்

சனி, 12 நவம்பர், 2011

        
 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/edc7cf01-992a-4541-97dd-c4435b5d9244_S_secvpf.gif

       

           கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி. வேல்முருகன். இவர் பா.ம.க. மாநில இணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.  இதற்கிடையே கடந்த 31-ந் தேதி வேல்முருகன் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனால்  பண்ருட்டி தி. வேல்முருகனின் ஆதரவாளர்கள் பா.ம.க. அலுவலகத்தை கைப்பற்றினர்.

         
பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களின் சீரிய முயற்சியால் தொடங்கப்பட்ட  பா.ம.க. அலுவலகம். இந்த நிலையில் கடலூர் மாவட்ட பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதில் 3 தரப்பினர் உரிமை கொண்டாடி வந்தனர்.  பண்ருட்டி தி.வேல்முருகனின் முயற்சியால்  தொடங்கப்பட்ட அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என்றும் தி.வேல்முருகன் ஆதரவாளர்களும்,  

           பா.ம.க.  அலுவலகம் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பா.ம.க. துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி  அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை  கொண்டாடி கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தனர்.

          இதனால் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்திட 3 தரப்பினரையும் தகுந்த ஆவணங்களுடன் வருகிற 13-ந்  தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கலெக்டர் அமுதவல்லி உத்தர விட்டிருந்தார்.  இதற்கிடையே  கடலூரில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி கட்சி  அலுவலகம் தொடர்பாக பிரச்சினை ஏற்படலாம் என கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை தாசில்தார் எழிலன் சீல் வைத்தார்.


Read more...

பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் சேலத்தில் புதியக் கட்சித் தொடங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

       பாமகவில் இருந்த நீக்கப்பட்ட பண்ருட்டி தி.வேல்முருகன்  தலைமையில் சேலம் வசந்தம் உணவகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது 

          ‘’பாமகவில் இருந்து இன்னும் ஏராளமானோர் வெளியேறவிருக்கின்றனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு புதிய கட்சி துவங்கப்படும்.   அதுதான் உண்மையான பா.ம.கவாக இருக்கும்’’ என்று கூறினார்.

Read more...

Seeman meets Panruti T.Velmurugan

புதன், 9 நவம்பர், 2011

PANRUTI:

       Naam Thamizhar Iyakkam chief Seeman, on Monday, met Panruti Velmurugan after his expulsion from PMK at Puliyur village near Panruti. Meanwhile, sources from both the sides hinted that the meeting was politically significant.

         The Naam Thamizhar Iyakkam chief arrived in Panruti around 8 pm and met Velmurugan at his residence. The meeting lasted for five hours. Sources hinted that Seeman made an invitation to Velmurugan to join his party and jointly fight for the rights of Tamil people. However, it is learnt that Velmurugan told Seeman that he would take a decision after getting the opinion of his supporters. Apart from politics, they have been maintaining friendship as they have shared the dais for the cause of Tamils. Velmurugan also acted in one of the movies directed by Seeman.

     Because of Seeman’s foreign tour, he could not meet Velmurugan immediately after he was expelled from PMK. “After returning to Tamil Nadu, Seeman gave preference to his friend Velmurugan at this important juncture, said a party source, adding, “They have met many times in the past, but this meeting holds political significance.” Immediately after Velmurugan’s expulsion from the PMK, news prevailed among his supporters that he would join Seeman’s Naam Tamilar party, but this was refuted after he said, in a meeting, that he would not join any political party.

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் புதிய கட்சி தொடங்க திட்டம் - பிரபாகரன் பிறந்த நாளில் கட்சியின் பெயர் அறிவிப்பு (நக்கீரன் செய்தி)





நக்கீரன் செய்தி 



          பாமக முன்னாள் இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் வேல்முருகன். இரண்டு முறை பண்ருட்டி சட்டமன்ற உறுபினராக  பதவி வகித்தவர். இவரின் வளர்ச்சியை பிடிக்காத சிலரின் தூண்டுதலால் கட்சித் தலைமை முறையான காரணம் இன்றி பா.ம.கவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. பா.ம.கவில் நீக்கப்பட்ட பண்ருட்டி தி.வேல்முருகன் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில்  புதிய கட்சி துவங்க இருக்கிறார்.

           பண்ருட்டி வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டவர்களை சுற்றுப்பயணம் செய்து சந்தித்து ஆதரவு திரட்டப் போவதாக அறிவித்திருந்தார்  பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிதுள்ளனர். பண்ருட்டி வேல்முருகனையும் அவரது ஆதரவாளர்களையும் தங்கள் கட்சியில் சேர்க்க முன்னனி கட்சிகள் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

         இந்த நிலையில்
பண்ருட்டி வேல்முருகன் புதிய கட்சி தொடங்க இருக்கிறார். வருகிற 27-ந் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் பண்ருட்டி வேல்முருகன் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது. கட்சியின் பெயர் மற்றும் கொடியை பற்றி அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு முகநூலில் குவியும் மக்களின் ஆதரவு - குமுதம் ரிப்போர்டர்

ஞாயிறு, 6 நவம்பர், 2011



 பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கட்சியிலிருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி  நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். பண்ருட்டி தி.வேல்முருகனுக்கு முகநூலில் குவியும் மக்களின் ஆதரவு என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டரில் வந்த செய்தி.

Read more...

கடலூரில் பா.ம.க.வை கைப்பற்றிய பண்ருட்டி தி.வேல்முருகன் - குமுதம் ரிப்போர்டர்


 பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கட்சியிலிருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி  நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இது  குறித்து குமுதம் ரிப்போர்டர் வந்த செய்தி  கடலூரில்  பாமகவை  கைப்பற்றிய பண்ருட்டி தி.வேல்முருகன்






Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம்

சனி, 5 நவம்பர், 2011

பண்ருட்டி தி.வேல்முருகன்  பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிறப்பு விவாதம்
ஒளிபரப்பு செய்யப்படும் நாள் : 06/11/2011  ஞாயிற்றுகிழமை
நேரம்  : இரவு 9.00 மணி 

Read more...

என்னை பற்றிய குற்றசாட்டை நிரூபிக்க தயாரா : பண்ருட்டி தி.வேல்முருகன் கேள்வி

வெள்ளி, 4 நவம்பர், 2011

சென்னை: 

          நான் ஒருமையில் பேசியதாகவும், அதற்கு சிடி இருப்பதாகவும் கூறுகிறார்களே அதை அவர்கள் நிரூபிக்கட்டும். என்னிடமும் சிடி இருக்கிறது, அதை வெளியிட்டு ராமதாஸையும் மற்றவர்களையும் நான் அம்பலப்படுத்துவேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாமகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன்.

நேற்று சென்னை வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி

             ராமதாஸையும், வடிவேல் ராவணனையும் ஒருமையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டி என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவிலும் இதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். ஆவேசத்தில் "இவன் ஆண்டான்' என்று சொல்வது போலத்தான் ராமதாûஸத் தெரிவித்தேன். வடிவேல் ராவணனை இப்போதும் நான் மதிக்கிறேன். அவரை ஒன்றும் நான் சொல்லவில்லை. செல்லூர் குமார் என்பவர் தொடர்பாகத்தான் பேசினேன். இதை அவர்கள் ஏற்கவில்லை. நிர்வாகக் குழு கூட்டம் நடந்தபோது,

தனியறையில் வைத்து...

          தனியறையில் வைத்து, மொத்தம் 24 பேர் என்னை மிரட்டினார்கள். அங்கு எனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னால் தமிழகம் முழுக்கவே சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். (இதைச் சொன்னபோது கண்ணீர் விட்டு அழுதார் வேல்முருகன்). என் குடும்பத்தாரைப் பற்றி கேவலமாகச் பேசினார்கள். இப்போதும் தொடர்ந்து உனக்கு விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகிறார்கள் என்றார். பணம் சேர்த்துவிட்டதாகக் கூறுகின்றனர். என்னுடைய மனைவி நகைகளை வைத்துதான் கட்சிப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். அவற்றைக்கூட மீட்க முடியாத நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

          டிஜிபியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளேன். நான் எந்த நேரம் தொலைபேசியில் அழைத்தாலும் எடுங்கள் என்று கூறியுள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் அதற்கு முன்பும் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி மிரட்டுகின்றனர்.

           ராமதாஸை தகாத வார்த்தைகளால் நான் பேசியதாக சிடி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடட்டும். நானும் எனக்கு நேர்ந்தவற்றை சிடியாக வைத்துள்ளேன். அவற்றையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பாமக தொடங்கிய காலம் தொட்டு கட்சியில் இருந்து வருகிறேன். கட்சியின் அனைத்து ரகசியங்களும் எனக்குத் தெரியும். என்னை நிர்பந்தப்படுத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்பதை எச்சரிக்கையாகவே கூறிக்கொள்கிறேன்.

           பாமகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். என்னை நீக்குவதற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலமே முடிவு செய்ய முடியும். அதனால் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து நியாயம் கேட்கப் போகிறேன். 1980-க்குப் பிறகு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசுவேன். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். அதேசமயம் எக்காரணத்தைக் கொண்டும் பாமகவில் இருக்க மாட்டோம். பாமகவைக் கைப்பற்றி நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம்.

          இனிமேல் ராமதாஸே கூப்பிட்டு எத்தனை பெரிய பதவியைக் கொடுத்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள்தான் உண்மையான பாமக என்பதை நிரூபிப்போம். அவர்களிடமிருந்து பாமகவை கைப்பற்றுவோம் என்றார் வேல்முருகன். வேல்முருகனுடன், பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, நெடுஞ்செழியன், சண்முகம், காமராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

முன்னாள் தலைவர்களை சந்திக்க திட்டம்

            அடுத்த கட்டமாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்து தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார் வேல்முருகன்.இவர்கள் அனைவரையும் இணைத்த பின்னர் பாமகவுக்கு எதிராக முழு நீளப் போரில் அவர் குதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Read more...

Panruti T.Velmurugan hints at floating new outfit



http://www.thehindu.com/multimedia/dynamic/00825/03THVELMURUGAN_825979f.jpg

T. Velmurugan, former PMK MLA, being carried by his supporters in Cuddalore on Wednesday.

        Questioning the authority of the executive committee of the Pattali Makkal Katchi to expel him, T.Velmuguran, former joint general secretary of the party, has called upon the party high command to convene a general body meeting in a week to decide on the issue through voting. Mr. Velmuguran was addressing a large gathering of his supporters at the Town Hall here on Wednesday. Just as he was elected to the party post through two-thirds majority of the general body, a similar procedure should be adopted for his expulsion too.


           Till then, he would be acting under the PMK banner and if there were any legal hurdles he would contemplate floating a new political party or a movement. Prior to that he would undertake a State-wide tour to seek justice, and, to meet and ascertain the views of those functionaries who were thrown out of the party over a period of time, the academia, intellectuals and party cadres, on his proposal to start a new outfit. When he announced the proposal there was a thunderous applause from the audience. He underscored the point that it was not on the agenda either to switch political party or to take along with him the supporters to other parties. Mr. Velmuguran appealed to Dr Ramadoss to convene a public meeting in Cuddalore to play the so-called controversial audio cassette and let them decide whether he deserved such a treatment.

Read more...

பா.ம.க.வளர்ச்சிக்காக தவறுகளை சுட்டி காட்டியது தவறா: பண்ருட்டி தி. வேல்முருகன் சிறப்பு பேட்டி

வியாழன், 3 நவம்பர், 2011

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற பா.ம.க. தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் (முன் வரிசையில் இடமிருந்து 3-வது).
கடலூர்:
            தனிக்கட்சி தொடங்குவதா, தனி இயக்கமா என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தெரிவித்தார்.  

கடலூரில் முன்னாள்   எம்.எல்.ஏ. வேல்முருகன் புதன்கிழமை கூறியது 
             

          பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரால் நான் தேர்ந்து எடுக்கப்பட்டு இணைப் பொதுச் செயலாளரானேன். கட்சியின் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு என்னை நீக்க அதிகாரம் இல்லை. பொதுக்குழுவைக் கூட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும். உயர்மட்டக் குழுவில் 14 பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். 10 பேர் போலியானவர்கள்.  நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசுவேன். அவர்களின் கருத்தை அறிந்த பின்னரே தனிக்கட்சியா, தனி இயக்கமா என்பதை முடிவு செய்வேன்.

            நான் நீக்கம் செய்யப்பட்டற்கு கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எனது தரப்பு வாதத்தை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என் பின்னால் நிற்கும் இளைஞர் பட்டாளத்தை, தொண்டர்களை எந்த அரசியல் கட்சியிடமும் அடகு வைக்க மாட்டேன் என்றார் வேல்முருகன். 

            முன்னதாக வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. கடலூர் நேதாஜி சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்துக்கு வந்த வேல்முருகன், வழக்கம்போல் அலுவலகத்தில் உள்ள அறைக்குச் சென்றார். பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க டவுன் ஹாலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 

பின்னர் கூட்டத்தில் முன்னாள்   எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில், 
               

           பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவற்றை எல்லாம் நான் ஏற்கவில்லை. டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்.  இருப்பினும் தீய எண்ணம் கொண்ட சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகிறார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்த பலர், பல காலக் கட்டங்களில் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்காக நான் தெரிவித்த பல்வேறு ஆலோசனையையும், சுட்டிக் காட்டிய தவறுகளையும் எனக்கு எதிராகச் சிலர் திருப்பி விட்டனர் என்றார். 



Read more...

கடலூரில் பண்ருட்டி தி.வேல்முருகன் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை



 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/3299acdc-37e7-42d1-91eb-73db96612133_S_secvpf.gif
 
கடலூர்:

        பாட்டாளி மக்கள் கட்சி மாநில இணைப் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கட்சியிலிருந்து எந்தவித நியாமான காரணம் இன்றி 
நீக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இதைத்தொடர்ந்து  ஆதரவாளர்கள் கூட்டத்தை நேற்று கடலூரில் கூட்டினார். டவுன்ஹாலில் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். 
 
அப்போது தி.வேல்முருகன் கூறியது:-

          நான் எனது 15-ம் வயதில் பா.ம.க.வில் சேர்ந்து 25 ஆண்டுகள் எனது உழைப்பை கொடுத்துள்ளேன். எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத அதிகார கும்பல் நான் டாக்டர் ராமதாசின் வலது கரமாக வளர்ந்து விடுவேனோ என்று எண்ணி என்னை கட்சியை விட்டு நீக்க திட்டம் தீட்டினார்கள். நான் 3 மாதத்துக்கு முன்பே பேசிய பேச்சில் என்ன தவறு இருக்கிறது? அதை நிர்வாக குழுவில் வாசித்து காட்டியிருக்கிறீர்கள். இதைவிட பல மடங்கு கூட்டத்தை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். நான் பேசிய பேச்சை அந்த கூட்டத்தில் போட்டு காட்டுங்கள். இந்த கட்சியில் 2-ம் கட்ட தலைவராக உருவாகி வருகிறேன் என்பதால் காய் நகர்த்தி வெளியேற்றி விட்டீர்கள்.

            இந்த இயக்கத்துக்கு ரத்தத்தையும், தியாகத்தையும் வழங்கிய வேல்முருகனுக்கே இந்த நிலை என்றால் மாநில, மாவட்ட நிர்வாகிகளே உங்களுக்கு என்ன நிலை என்று யோசித்துப் பாருங்கள்.நான் இப்போது பா.ம.க. வில்தான் இருக்கிறேன். இந்த கட்சியில் இருந்துதான் செயல்படுவேன். இந்த கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் நீதி மன்றத்துக்கு சென்று தடை ஆணை வாங்கி வந்தால் இந்த கட்சியின் பெயருக்கு முன்னால் புதிய பெயருடன் செயல்படுவோம். இன்றைக்கு நான் அழைக்காமலே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் வந்துள்ளனர். என்னை நீக்கியது சரியா, தவறா? என்பதை முடிவு செய்ய ஒருவார காலத்திற்குள் பா.ம.க. குழுவை கூட்ட வேண்டும்.

            தேர்தலில் கூட்டணி வைக்க பொதுக்குழுவை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுத்தீர்களே அதேபோல் ஒரு வார காலத்திற்குள் பொதுக்குழுவை கூட்டி வேல்முருகனை நீக்கியது சரியா, தவறா? என்று முடிவெடுக்க வேண்டும். என்னை நீக்கியது சரிதான் என்று பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டால் பா.ம.க. பெயரை அதன் பிறகு நான் பயன்படுத்த மாட்டேன். அதன்பிறகு தமிழகம் முழுவதும் சென்று இளைஞர்களிடமும், பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு புதிய பெயருடன் இயக்கம் காண்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Read more...

மாற்று கட்சியில் இணையும் எண்ணம் இல்லை : தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 2 நவம்பர், 2011


           முறையான காரணம் இன்றி முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.   இந்த தகவல் வெளியானதை அடுத்து கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில்  ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கட்சி அலுவலகம், நெய்வேலியில் உள்ள பா.ம.க. தொழிற்சங்க அலுவலகம் சூறையாடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ம.க. கொடிக்கம்பங்களை அகற்றினார்கள். இந்த நிலையில் பா.ம.க. வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் தி.மு.க.வில் சேரப்போவதாக கடலூர் பகுதியில் நேற்று தகவல் பரவியது. 

இதுபற்றி வேல்முருகன் கூறியது
 
            வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போதும் பா.ம.க. வில் தான் இருக்கிறேன். நான் நீக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ம.க. தொண்டர்களிடம் நீதி கேட்பேன். நான் நீக்கப்பட்டது சம்பந்தமாக இதுவரையிலும் எனக்கு எந்த தகவலும் முறைப்படி அனுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தகவல் வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் முடிவு செய்வேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP