உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட பா.ம.க.பணிக்குழு பட்டியல் : தி.வேல்முருகன் வெளியிட்டார்

திங்கள், 26 செப்டம்பர், 2011

கடலூர்:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என மாநில இணை பொதுச் செயலாளர்  வேல்முருகன் கூறியுள்ளார்.

மாநில இணை பொதுச் செயலாளர்  தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்ட பா.ம.க., வில் உள்ளாட்சித் தேர்தல் பணிக் குழுக்கள் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாநில துணை பொதுச் செயலர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி

கடலூர், பண்ருட்டி:

           கடலூர், பண்ருட்டிக்கு மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அலுவலக செயலர் ராமச்சந்திரன், தலைவர் கோதண்டபாணியும், 


நெய்வேலி, குறிஞ்சிப்பாடி:

      
நெய்வேலி, குறிஞ்சிப்பாடிக்கு மாநில துணைத் தலைவர் திருமால்வளவன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து வைத்திலிங்கம், தலைவர் சக்திவேல், அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி:

              புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடிக்கு மாநில தேர்தல் பணிக்குழு தனபால், மாவட்டச் செயலர் சின்னதுரை, முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் திருஞானம், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வராசு, மாவட்டத் தலைவர் ஆடியபாதம், சிதம்பரம், 

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலுக்கு மாநில துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

Read more...

கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் : தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்

புதன், 21 செப்டம்பர், 2011

சேத்தியாத்தோப்பு : 

           உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

            கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஆடியபாதம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி, மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தேவதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சின்னதுரை வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலர் சேரலாதன், ராஜா சாமிநாதன், வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

  1.  உள்ளாட்சியில் அனைத்து பதவிகளுக்கும் பா.ம.க., வேட்பாளர்களை நிறுத்துவது. 
  2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 
  3. சேத்தியாத்தோப்பு பால் குளிரூட்டு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். 
  4. மாவட்டத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் 

        என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய செயலர்கள் இளையராஜா, சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலர் ராதாகிருஷ்ணன் பரமசிவம், பஞ்சநாதன், வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புவனகிரி ஒன்றிய செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்


Read more...

பண்ருட்டியில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் தி.வேல்முருகன் அஞ்சலி

திங்கள், 19 செப்டம்பர், 2011


பண்ருட்டி:

            இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

           பாமக சார்பில் இட ஒதுக்கீடு வேண்டி 1987 செப்டம்பர் மாதம் தொடர் சாலை மறியல் நடைபெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற சாலை மறியலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிர் இழந்தனர். 

              கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுதொண்டமாதேவியை சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணி, முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



 

Read more...

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலைக்காக மக்களை நோக்கி பயணம் - பாமக இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைக்கிறார்

3 தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனைக்கு எதிராக மக்களை நோக்கி...  பயணம்  புறப்படுகின்றது. 

தமிழ்நாடு முழுவதும் 16 நாட்கள் பயணம்

 20.902011 - 05.10.2011

மாலை - 6மணி. 

இடம்: இராயபேட்டை,
சென்னை-14.


 







Read more...

பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் பாலிமர் தொலைகாட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் பேட்டி - வீடியோ

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பாமக இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் பாலிமர் தொலைகாட்சியில் மக்களுக்காக நிகழ்ச்சியில் சிறப்பு பேட்டி - வீடியோ



நாள்: மே 29, 2011 நேரம் : 21:00 - 22:00


பகுதி -  1





 
பகுதி -  2 


 
  பகுதி -  3
 
 

Read more...

செங்கொடியின் இறுதி நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் வேல்முருகன் வீரவணக்க உரை - வீடியோ காட்சி

சனி, 10 செப்டம்பர், 2011

 நாள் :   05/09/2011

செங்கொடியின் இறுதி நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் வேல்முருகன் வீரவணக்க உரை -  வீடியோ காட்சி 






Halloween Comments - http://www.halloweentext.comகடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செங்கொடியின் இறுதி நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் அஞ்சலி - புகைப்படங்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

 நாள் :   05/09/2011

            தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக உயிர் நீத்த இளம் பெண் செங்கொடியின் உடல் தகனம்  அவரது சொந்த கிராமமான மங்கல்பாடியில் நடைபெற்றது . அவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
 
             காஞ்சிபுரத்தில்வசித்து வந்த இளம் பெண் செங்கொடி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது மரணம், அதுவும் தமிழகத்தில் முதல் முறையாக நடந்த ஒரு பெண்ணின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழக மக்களை உலுக்கி விட்டது. இந்த தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் அசாதாரணமான நிலை ஏற்பட்டது.

           உயிர் நீத்த செங்கொடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள்அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களுக்காக பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வந்த செங்கொடிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின்  இணைப் பொதுச்செயலாளர் தி.வேல்முருகன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP