நெய்வேலியில் பா.ம.க. பயிற்சி முகாம் எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

திங்கள், 31 ஜனவரி, 2011

நெய்வேலி : 

           கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களாக சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வரும் நிலைமை மாற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 

            கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க., பயிற்சி கூட்ட அரங்கம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., வேல்முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் திருமால்வளவன், வடக்குத்து ஜெகன், வைத்தியலிங்கம், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது: 

               தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள வன்னியர் சொந்தங்களை பா.ம.க.,விற்கு கொண்டு வர நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.மதுவை ஒழிப்போம் என தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத் தான் இருக்கும். 

              அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன் இலவச வேலைவாய்ப்பு. ஆனால் வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். பா.ம.க.,வைத் தவிர பிற கட்சிகள் வளர்ந்து, சரிந்து, முடிந்துபோன கட்சிகள். கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலை மாற வேண்டும். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.

              பா.ம.க.,விற்காக உழைத்து கட்சியிலிருந்து விலகியவர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நான் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார். 

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

           அம்பானி மகனுக்கு கிடைக்கும் தரமான அதே கல்வி, என் சமுதாய மக்களுக்கும் கிடைக்க போராடுவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. நமது கட்சியில் வயதானவர்கள் விலைபோய் விடுவார்கள். ஆனால் இளைஞர்கள் விலை போக மாட்டார்கள். 

           தேர்தலின்போது, கொள்ளையடித்த பணத்திலிருந்து 500, 1000 ரூபாய் என அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டுப்போடுவோம் எனக்கூறி, அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் உங்களுக்கு திரும்பித் தருகின்றனர். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 


Read more...

ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்: எம்.எல்.ஏ.வேல்முருகன் பங்கேற்ப்பு

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அரியலூர்:

         சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

            அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் நடந்த ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமுக்கு, பா.ம.க., மாவட்ட தலைவர் வைத்தி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பாலு வரவேற்றார். மாநில தலைவர் மணி, எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினர்.
  
பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் பேசியது: 

           வரும் சட்டசபை தேர்தலில் காடுவெட்டி குரு, ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால், இந்த தொகுதி பிரச்சாரத்துக்கு அவர் வரமாட்டார். அவரை வெற்றி பெறச்செய்வது உங்கள் கடமை.சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பெண்களை கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டமும் நடத்தப்படும். இப்போராட்டத்தை நானே முன்னின்று நடத்துவேன். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.

                     தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்டவர் தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பா.ம.க.,வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பா.ம.க., கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும்.தொடர்ந்து பா.ம.க., சார்பில் விளையாட்டு குழு அமைத்து, நாள்தோறும் மாலையில் வாலிபால், சடுகுடு, சிலம்பம் போன்ற விளையாட்டுகளை நடத்த வேண்டும்.கல்விக்குழு, விவசாயக்குழு, மருத்துவக்குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கிராமத்துக்கு வேண்டிய அடிப்படை தேவை கிடைக்க பாடுபட்டால் கட்சி வலுவாக இருக்கும்.ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தை நானே முன்னின்று காடுவெட்டி குரு தலைமையில் நடத்துவேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP