கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

புதன், 15 டிசம்பர், 2010

கடலூர் : 

                   கடலூரில் பா.ம.க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:

                  பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , -  டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.  

                மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  

                தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

வெள்ளச் சேதம் பாமக குழு பார்வையிடும்: ஜி.கே. மணி

செவ்வாய், 7 டிசம்பர், 2010


அரக்கோணம்:
 
             வெள்ளச் சேதங்களை பாமகவின் ஐவர் குழு பார்வையிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறினார். 
 
சோளிங்கரில் திங்கள்கிழமை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கூறியது:
 
               கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிக அளவில் உள்ளது. 
 
               பாமக நிறுவனர் ராமதாஸின் உத்தரவின்பேரில், இம்மாவட்டங்களில் கட்சியின் ஐவர் குழு 7-ம் தேதி முதல் பார்வையிட உள்ளது. எனது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.வேலு, பொன்னுசாமி, எம்எல்ஏக்கள் பெரியசாமி, வேல்முருகன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 
 
              தற்போது வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ள 100 கோடியை அதிகரிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும். 
 
பாலாற்றில் தண்ணீர் வரவில்லை:
 
             தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், பாலாற்றில் மட்டும் தண்ணீர் வரவில்லை. இதற்கு குப்பம் தொகுதியில் உள்ள கணேசபுரத்தில் ஆந்திர அரசு கட்டிவரும் தடுப்பணையே காரணம். எனவே, அந்த தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் 
 
"உன்னையே நீ அறிவாய்' ஆலோசனைக் கூட்டம்:
 
                தீய சக்தி, பண்பாட்டு சீரழிவில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்களை காப்பாற்ற "உன்னையே நீ அறிவாய்' எனும் ஆலோசனைக் கூட்டங்கள் பாமக சார்பில் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் 100 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இத்தகைய கூட்டங்களை நடத்த உள்ளோம். தற்போது 22 தொகுதிகளில் இக்கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP